×

ஆம்பூர் அருகே சிறுத்தை அட்டகாசம்

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அபிகிரிபட்டறை கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் புகுந்த சிறுத்தை அங்கிருந்த 3 ஆடுகளை கடித்துக் குதறி கொன்றது. மேலும் ஒரு ஆட்டை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று போட்டது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் மேய்ச்சலுக்காக நேற்று காலை அழைத்துச் சென்ற ஆடுகளை அவசர, அவசரமாக தங்களது வீடுகளுக்கு ஓட்டிச் சென்றனர். இதுகுறித்து ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambur , Panorama near Ambur
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு