×

பதிவுத்துறை புகைப்படக்கருவிகள் திட்டம்: நாளை மறுநாள் முதல் புதுப்பொலிவுடன் வருகிறது

சென்னை: சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் மற்றும் திருமணப் பதிவு நிகழ்வுகள் இணையநெறிமுறை புகைப்படக்கருவிகள் வழி படம் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென பொதுமக்களிடமிருந்து ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்திட்டத்திலிருந்த குறைபாடுகள் களையப்பட்டு 18.2.2019 முதல் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படுகிறது.சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணப்பதிவு/திருமணப்பதிவு முடிந்தவுடன் அப்பதிவு நிகழ்விற்கான காகித உறையிலிடப்பட்ட ஒளிப்பட குறுந்தகடு மற்றும் பிரத்தியேகமான காகித ஆவணப் பாதுகாப்பு உறையில் இடப்பட்ட ஆவணம்/திருமணச் சான்று ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் பதிவு நிறைவடைந்தவுடன் பதிவு செய்யப்பட்ட ஆவணம் / திருமணச் சான்று ஆகியவற்றை பெற்றுக்கொள்ளும் போது மேற்படி ஒளிப்பட குறுந்தகட்டில் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டு பெற்றுச்செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருப்பின் பதிவுத்துறைத் தலைவர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 102 5174-ஐ தொடர்புகொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Registration, newpolicy
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...