×

ஓரிரு தினங்களில் கூட்டணி தொடர்பான நல்ல முடிவு வெளியாகும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: சென்னையில் அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது. ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் இந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். வன்முறை எங்கு நடந்தாலும் அதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பேசிய அவர், அதிமுக கூட்டணி குறித்து தேசிய கட்சிகளுடனும், மாநில கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறினார். கூடிய விரைவில் ஒரு நல்ல முடிவு எட்டப்படவுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்து நல்ல முடிவு வரும் என தெரிவித்தார்.

மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிட சுமார் 2000 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை அளித்துள்ளதாக கூறினார். அதற்கான நேர்காணல் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து வெளியிடப்படும் எனக் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்களின் நலனுக்காக மக்கள்நல திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனால் தமிழக மக்கள் தங்கள் பக்கம் தான் எனக்கூறினார். எனவே, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெரும். பாஜக -அதிமுக கூட்டணி அமையுமா? என்பது குறித்து பத்திரிகையாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விரைவில் கூட்டணி குறித்து ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படும் என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : O.Panniriselvam ,coalition , Ally,the AIADMK,opannircelvam,Chennai
× RELATED 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி...