×

தேனி கலெக்டர் ஆபீசில் முதியவர் தீக்குளிப்பு

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை முதியவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா குன்னூர் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் முனியாண்டி (57). இவர் நேற்று மாலை தேனி கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவரது உடல் பற்றி எரிந்தது. அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தீயை அணைத்தனர். தகவலறிந்த தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் வந்து, முனியாண்டியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ``முனியாண்டி தீக்குளித்த இடத்தில் ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளோம். அதில் தனது தம்பிகள் கோவிந்தராஜன், அழகுராஜா மற்றும் மகன் பாலமுருகன் ஆகியோரை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக, சென்னையை சேர்ந்த இமானுவேல் மரியசெல்வம் கூறி உள்ளார். இதை நம்பி முனியாண்டி தன்னிடமிருந்த பணம், உறவினர்களிடமிருந்து ₹18 லட்சத்தை, 11 மாதங்களுக்கு முன்பு இமானுவேல் மரியசெல்வத்திடம் வழங்கியுள்ளார். ஆனால், வேலை வாங்கி தராததுடன் பணத்தையும் அவர் வழங்கவில்லை என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். எழுத படிக்க தெரியாத முனியாண்டி, வெளியே மனு எழுதுபவர்களிடம் மனு எழுதி வாங்கியுள்ளார். கடிதத்தின் கீழ் `என் தற்கொலைக்கு... மரியசெல்வம்’’ என்று எழுதி முனியாண்டி என எழுதப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் முனியாண்டி சிகிச்சை பெற்று வருகிறார்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elder ,fire worker ,office ,Theni Collector , Theni, collector's office, Old , fire
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...