×

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியின் உருவபொம்மையை எரித்து முதல்வர் தலைமையில் போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண்பேடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை முன்பு உருவபொம்மையை எரித்து முதல்வர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருப்பதாக கூறி எம்.எல்.ஏக்களுடன் கருப்பு சட்டை அணிந்து முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது பேட்டி அளித்த அவர், புதுச்சேரி மக்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொல்லை கொடுத்து வருகிறார் என்றும் ஆசிரியர்கள், செவிலியர்கள் பணி நியமனம் உள்ளிட்டவற்றை கிரண்பேடி நிறுத்தி வைத்துள்ளார் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,Puducherry ,Chief Minister , Puducherry, Governor, Kiranpadi, Assistant
× RELATED புதுச்சேரியில் கம்பன் விழாவை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்..!!