சென்னை: மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.170.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ரூ.420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி,திருவெற்றியூர் குப்பத்தில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடல் மீனவர்களின் தொலைத்தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி