×

நண்பர்களை ஜாமீனில் எடுக்கவந்தபோது கைவரிசை காவல்நிலையத்திலேயே பைக் திருடிய கில்லாடிகள்

கூடலூர்: நண்பர்களை ஜாமீனில் எடுக்க வந்து, போலீஸ் ஸ்டேஷனிலேயே பைக்கை திருடிச் சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், குமுளி அருகே வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து அலுவலகத்தின் பின்புறம் கடந்த சில நாட்களாக, பதிவெண் இல்லாத பைக் நிறுத்தப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பைக்கை கைப்பற்றி வண்டிப்பெரியாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவரின் பெயரில் பைக் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

நேற்று முன்தினம் ஒரே பைக்கில் சென்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை ஜாமீனில் அழைத்து வர நண்பர்களான அர்னக்கல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21), மணிகண்டன் (20), விமல் (19) ஆகியோர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். ஸ்டேஷனுக்கு வந்த அவர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பதிவெண் இல்லாத பைக்கை திருடிக் கொண்டு சென்றனர். இதனால் பதறிப்போன வண்டிப்பெரியாறு போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் ஒரு வழியாக அர்னக்கல் பகுதியில் சுற்றித் திரிந்த விக்னேஷ் உட்பட மூவரையும் கைது செய்தனர். அவர்கள் திருடிச் சென்ற பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bailiff ,friends ,standstill , The bailiff, bike stolen guns when bail was taken
× RELATED திருவான்மியூரில் கழுத்து அறுத்து...