×

சேர்ந்து வாழலாம் என்று ஆசைகாட்டி கணவரே கொலை செய்துவிட்டார்: உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சந்தியா, குமரி மாவட்டம் அருமநல்லூர் அருகே ஞாலம் பகுதியை சேர்ந்தவர். சந்தியா கொல்லப்பட்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  போலீசார் அளித்த தகவலை தொடர்ந்து அவரது தந்தை ராமச்சந்திரன், தாய் பிரசன்ன குமாரி ஆகியோர் சந்தியா உடலை அடையாளம்காட்ட சென்னை வந்துள்ளனர். இது தொடர்பாக சந்தியாவின் உறவினர்கள் கூறியதாவது:  சந்தியா சென்னை சென்ற வேளையில் அவரை சந்தித்த பாலகிருஷ்ணன் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம். இந்த தகவலை நீ இப்போது யாரிடமும் கூற வேண்டாம். நம் குழந்தைகளிடம் கூட கூற வேண்டாம் என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் சந்தியா கணவருடன் சேர்ந்து வாழும் ஆசையுடன் இருந்தார். இதனை அப்போதே தனது பெற்றோருக்கு தெரிவித்துவிட்டார். அவர்களும் மகள் கணவருடன் சேர்ந்து வாழ இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

 தந்தை ராமச்சந்திரன் கூலி தொழிலாளி. சந்தியாவின் திருமணத்தின்போது 20 பவுன் நகை மற்றும் 2 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். மேலும் சந்தியா அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு வந்து நகை மற்றும் பணம் வாங்கி சென்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் பெற்றோரிடம், சென்னையில் வீடு வாடகைக்கு எடுக்க வேண்டும் எனவே பணம் வேண்டும் என கேட்டுள்ளார். பெற்றோரும் உறவினர்களிடம் கேட்டு வாங்கி 75 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் சென்னையில் இருந்தவாறே பாலகிருஷ்ணனும், சந்தியாவும் பெற்றோரிடம் போனில் பேசியுள்ளனர். இந்தநிலையில்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார். சேர்ந்து வாழலாம் என்று ஆசைகாட்டி அழைத்து சென்று சந்தியாவை கணவரே கொலை செய்துவிட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : conspirator , Husband, murder, relatives
× RELATED தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த சதி...