×

உடுமலை பகுதிக்குள் புகுந்த சின்னத்தம்பி யானைக்கு மயக்கம்

உடுமலை: உடுமலை பகுதிக்குள் புகுந்த சின்னத்தம்பி யானைக்கு திடீர் மயக்கம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல கிலோ மீட்டர் நடந்து வந்த களைப்பால் மயக்கமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமராவதி சர்க்கரை ஆலை அருகே சின்னத்தம்பி யானை தரையில் படுத்த நிலையில் உள்ளது என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. சின்னத்தம்பி யானை உறக்கத்தில் இருப்பதாகவும், சற்று நேரத்தில் எழுந்துவிடும் என வனத்துறை தகவல் அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathampi ,region ,Udumalai , Chinnathambi, elephant
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு