×

நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிகள் 2 பேர் வெட்டிக்கொலை; பழிக்கு பழியா என போலீஸ் விசாரணை

நெல்லை: நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிகள் 2 பேர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருப்பது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரவநல்லூரை சேர்ந்த சுடலைமணி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த கணேசன் ஆகியோர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு முன்னீர்பள்ளம் அருகே உள்ள காண்சாபுரத்தில் உள்ள பாட்டியின் வீட்டிற்கு கணேசனுடன் சுடலைமணி வந்துள்ளான்.

அப்போது அங்கு வந்த மர்மகும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நெல்லையில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. வழக்கில் ஆஜராக வெளியூரில் இருந்த கணேசனுடன் சுடலைமணி நேற்று நெல்லை வந்துள்ளார். இந்த நிலையில் இது பழிக்குப்பழி வாங்க நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : victims ,riots ,courtyard ,jail , Tirunelveli, Veeravanallur, Murder, Rowdy, Police Inquiry
× RELATED அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி