×

சென்னையில் தகாத வார்த்தையால் திட்டிய காவல்துறையினர்; தற்கொலைக்கு முன் கால்டாக்சி ஓட்டுநர் வீடியோ வெளியீடு

சென்னை: சென்னையில் காவல்துறையினர் தகாத வார்த்தையில் திட்டியதால் கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ம் தேதி அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே ராஜேஷ் காருடன் சாலையோரம் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அவரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ராஜேஷ் மறைமலைநகர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக ராஜேஷ் வாட்ஸ் அப் மூலமும் தனது சாவுக்கு போலீசார் தான் காரணம் என்று மனக்குமுறலை பதிவிட்டுள்ளார். ராஜேஷின் திடீர் தற்கொலையால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் ராஜேஷின் மொபைலை சோதனை செய்த போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு தரமணி அருகே காவல்துறை திட்டியதால் மணிகண்டன் என்ற ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Caldaxi ,suicide , Chennai, police, calTaxi driving, abusive word, suicide
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்