×

சென்னை போரூரில் இரும்புக்கதவு தலையில் விழுந்ததால் சிறுவன் உயிரிழப்பு

சென்னை:  புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் இரும்புக்கதவு சரிந்து விழுந்ததில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரில் கணேஷ் அவென்யூ, 8-வது தெருவில் வசிப்பவர் ஏழுமலை-லட்சுமி தம்பதி. இவர்களுக்கு 6 வயதில் விஷால் என்ற மகன் இருந்தார். விஷால் முகலிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

விஷால் வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் இரும்புக் கதவைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது இரும்பு கேட்டின் மீது சிறுவன் ஏற முயன்றபோது எதிர்பாராத விதமாக அது சரிந்து விழுந்துள்ளது. இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி சிறுவன் விஷால் பரிதாபமாக உயிரிழந்தான். இதனை அடுத்து தகவலறிந்து வந்த போலீசார், அந்த கட்டிடத்தின் கட்டுமான இன்ஜினீயரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Chennai Warriors , death , boy, iron collar, Chennai ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...