×

59,839 மெட்ரிக் டன் நிலக்கரி கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி  வ.உ.சிதம்பரனார் துறைமுகம்  ஒரே நாளில் 59,839 மெட்ரிக் டன் நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. வ.உ.சி துறைமுக முதலாவது வடக்கு சரக்குதளத்தில் 27ம் தேதி அக்குவா நைட் என்ற கப்பல் வந்தது. இந்த கப்பலில் இருந்து அன்று ஒரேநாளில் 59,839 மெட்ரிக் டன் அனல்மின் நிலக்கரியை கையாளப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய சாதனையான 14.06.2018 அன்று எம்.வி. அல்ட்ரா குஜராத் என்ற கப்பலிருந்து சரக்குதளம் 9ல் ஒரே நாளில் கையாண்ட அளவான 51,413 மெட்ரிக் டன் அனல்மின்கரியை விட அதிகமாகும்.

இதற்கு முன்பு முதலாவது வடக்கு சரக்கு தளத்தில் ஒரே நாளில் 20.03.2018 அன்று 48,701 மெட்ரிக் டன் அனல்மின் கரி கையாளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டு நெய்வேலி அனல்மின் நிலையத்திற்கான வடக்கு சரக்கு தளம்  1ல்  அனல்மின் கரி 3.60 மில்லியன் டன் கையாளப்பட்டுள்ளது, மேலும் இந்த நிதியாண்டு டிசம்பர் மாதம் 2018 வரை 2.73 மில்லியன் டன் அனல்மின் கரி கையாளப்பட்டுள்ளது. இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை  துறைமுக சேர்மன் ராமசந்திரன்  பாராட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi VCC Harbor , Coal, Thoothukudi, harbor
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...