×

பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவுசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாரண்ணன், தந்தை மரணத்துக்கு பிறகு வாரிசுரிமை சான்று கோரி தாசில்தாரிடம் விண்ணப்பம் செய்தார். மாரண்ணனின் தந்தைக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ள நிலையில் தான் மட்டுமே வாரிசு எனக்கூறி விண்ணப்பித்துள்ளார். வாரிசுரிமை சான்று தர மறுத்து மாரண்ணன் விண்ணப்பத்தை மேட்டுப்பாளையம் தாசில்தார் நிராகரித்தார்.

மேட்டுப்பாளையம் தாசில்தாரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாரண்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டு. 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு வருவாய் நிர்வாகத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Marannan ,Metuppalaiat ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி...