×

சார்லி சாப்ளின்-2 படம் குறித்து அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் புகார்

சென்னை: சார்லி சாப்ளின்-2 படம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் ஷக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் ஷக்தி சிதம்பரம் ேநற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் சார்லி சாப்ளின்-2 திரைப்படத்தை இயக்கி கடந்த 25ம் தேதி தமிழகம் உட்பட உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி தமிழ் டாக்கீஸ் என்ற பெயரில் புளுசட்டைமாறன் என்பவர் சார்லி சாப்ளின்-2 திரைப்படத்தை யூ-டியூபில் விமர்சனம் செய்ய போவதாகவும், அதில் விளம்பரம் செய்வதற்கு பெரும் தொகை கேட்டு வற்புறுத்தினார். அதற்கு நாங்கள் விளம்பரம் தர முடியாது என்று கூறிவிட்டோம். இதனால் அவர், சார்லி சாப்ளின்-2 படத்தை மிக தரக்குறைவான வகையில் ஒருமையில் பேசியும் விமர்சனம் செய்துள்ளார். இதை பார்த்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தங்களது அச்சத்தை தெரிவிக்கின்றனர். எனவே, திரைப்படத்தை தவறாக விமர்சனம் செய்த புளுசட்டைமாறன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவர் நடத்தும் தமிழ் டாக்கீஸையும் முடக்க ேவண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Actor ,Film Director ,Commissioner ,Charlie Chaplin-2 ,Office , Charlie Chaplin -2, film director
× RELATED வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து...