×

போராட்ட குழுவிடம் பேச வேண்டும்:தமாகா

சென்னை: கைது நடவடிக்கை எடுக்காமல் ஜாக்டோ ஜியோவினருடன் முதல்வர் உடனடியாக பேச வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது ஏற்புடையதல்ல.  இதற்கு பதிலாக அரசு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : protest group ,Tamana , Fight team,
× RELATED தூத்துக்குடியில் தந்தை, மகன்...