×

தமிழர்களின் உரிமையை பறித்துக்கொண்டே இருக்கிறார்கள் : மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா , பொதுச் செயலாளர் அப்துல் சமது மாநில பொருளாளர் கோவை உமர் உள்ளிட்டோர்சந்தித்துப் பேசினர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்களை திமுக தலைவரிடம்  எழுத்துப்பூர்வமாக அளித்தோம். இன்றைய காலகட்டத்தில் சமூகநீதியும், சமூக நல்லிணக்கமும் தழைத்தோங்க வேண்டும் மாநிலங்களின் உரிமை காக்கப்பட வேண்டும்.மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு இந்த மூன்று அம்சங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மாநிலங்களின் உரிமை பறிக்கக் கூடிய இடத்தில் பாஜகவும் அதற்கு ஒத்துப் போகின்ற இடத்தில் அதிமுகவும் உள்ளது.அஞ்சல் துறையில் கணக்காளர் பணிக்கு நடைபெறவுள்ள உள்ள தேர்வு இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே  நடைபெறும் என அறிவித்திருப்பது நாள்தோறும் தமிழர்களின் உரிமையை பறித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. திமுக கூட்டணியில் வேறு இஸ்லாமிய அமைப்புகள் இணைந்தாலும் எங்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை, திமுக தலைவர் கூட்டணி நலன் குறித்து எடுக்கக்கூடிய எந்த முடிவுகளுக்கும் நாங்கள் ஆதரவாக இருப்போம்.தேர்தலில் போட்டியிடும் இடங்கள் தொடர்பாக நாங்கள் இப்போது பேசவில்லை தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே அது குறித்துப் பேசுவோம் எனவும் தெரிவித்தார்….

The post தமிழர்களின் உரிமையை பறித்துக்கொண்டே இருக்கிறார்கள் : மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : Tamils ,G.K. ,stalin ,jawahirullah ,Chennai ,President ,Anna Anna Kanwalayam ,CM ,G.K. Javahirullah ,Humanitarian People's Party ,B.D. G.K. Humanitarian People's Party ,
× RELATED மயிலாடி சிற்பங்களுக்கு கற்கள் கிடைக்குமா? தொழிலாளர்கள் கவலை