ஜோலார்பேட்டை,: ‘வீடு வீடாக திருட்டு கேசட் விற்றவர் டிடிவி தினகரன்’ என்று ேஜாலார்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி கடுமையாக தாக்கி பேசினார்.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது: இலங்கையில் பிறந்து தமிழகம் வந்து நாடகம், சினிமா மூலம் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அவரால் உருவாக்கப்பட்ட அதிமுகவை இதே இயக்கத்திலிருந்து தின்று கொழுத்து, நம்மை சிரமத்திற்கு ஆளாக்கியவர்கள்தான் இந்த மாபியா கும்பல் சசிகலா குடும்பம். திருட்டு கேசட் விற்க வந்த சசிகலா குடும்பத்துடன் இணைந்து வீடு வீடாக சென்று திருட்டு கேசட் விற்றவர் டிடிவி தினகரன். சில எம்எல்ஏக்களை தன் வசம் இழுத்து கட்சியையும், ஆட்சியையும் அழிக்க நினைக்கிறார்கள். இன்னும் பல நூறு ஆண்டு கடந்தாலும் இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. ஜோலார்பேட்டை தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ₹1,250 கோடி நிதி ஒதுக்கி தற்போது வேலூர் மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி