×

ரோசல்பட்டி ஊராட்சி மயானத்தில் மலை போல் குப்பையை குவித்து எரிப்பு-சுற்றுச்சூழல் பாதிப்பு

விருதுநகர் : விருதுநகர் ஒட்டி உள்ள ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரோசல்பட்டி, காந்திநகர், ஓடைப்பட்டி, தங்கமணிகாலனி, பாண்டியன் நகர், முத்தால் நகர், கேகேஎஸ்எஸ்என் நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.முதல்நிலை ஊராட்சியின் அனைத்து பகுதிகளும் குடியிருப்புகளாகி விட்ட நிலையில், ஊராட்சியில் தினசரி சேரும் குப்பைகளைக் கொட்ட இட வசதி இல்லை. ஊராட்சி நிர்வாகத்தால் குப்பைகளை சுத்திகரிப்பு செய்து மறு உபயோகத்திற்கு பயன்படுத்த இடம் மற்றும் நிதி வசதி இல்லாததால் தினசரி சேரும் குப்பைகளை பொது மயானத்தில் மலைபோல் கொட்டி வருகிறது.மயானத்தில் சுற்றுச்சுவர், தண்ணீர், மின்வசதியின்றி சடலங்களுடன் வருவோர் அவதிப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒராண்டிற்கு மேலாக குப்பைகளைக் கொட்டி மலை போல் குவித்து வைத்துள்ளனர். சடலத்தை எரிக்கும் கொட்டகையை சுற்றி குப்பையை குவிப்பதால் சடலங்களை எரிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.ஊராட்சியால் கொட்டப்படும் குப்பைகளுக்கு சமூகவிரோதிகள் தீ வைப்பதால் அருகில் உள்ள கேகேஎஸ்எஸ்என் நகர், காந்திநகர், பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்து ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் சுவாச பிரச்னை, மூச்சுத்திணறல், கண் கோளாறுகளால் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகி வருகிறது….

The post ரோசல்பட்டி ஊராட்சி மயானத்தில் மலை போல் குப்பையை குவித்து எரிப்பு-சுற்றுச்சூழல் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Rosalpatti Panchayat ,Virudhunagar ,Rosalpatti ,Gandhinagar ,Odaipatti ,Thangamanikalani ,Pandian Nagar ,Muthal ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...