×

சிறை கைதி திடீர் மரணம்

புழல்: புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, சிபிஐ வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட சென்னை சூளைமேட்டை சேர்ந்த சிவக்குமார் (56) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டிருந்தார்.நேற்று முன்தினம் அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவக்குமார் நேற்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prisoner ,death , Puzhal central prison, prisoner, sudden death, Stanley Hospital
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...