- சேந்தமங்கலம் தொகுதி
- எம்டி எல்
- நாமக்கல்
- Sendamangalam
- எல். பா
- சந்திரசேகரன்
- சேந்தமங்கலம் தொகுதி
- எல். பா.
- தின மலர்
நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பெண்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வான சந்திரசேகரனுக்கு மீண்டும் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் சுயேட்சையாக ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக அவரும் அவரது ஆதரவாளர்களும் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் வடுகப்பட்டி கிராமத்தில் சந்திரசேகரனுக்கு ஆதரவாக 15க்கும் மேற்பட்ட பெண்கள் பரப்புரையில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கே வந்த அதிமுகவினர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை தாக்கினர். மேலும் ஆடையை கிழித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிருப்தி வேட்பாளரின் ஆதரவாளர்களை அதிமுகவினர் தாக்கியது தொடர்பாக சேந்தமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற பெண்கள் மீது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. …
The post சேந்தமங்கலம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.விற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற பெண்கள் மீது அதிமுக-வினர் தாக்குதல்!: ஆடைகளை கிழித்ததாக புகார்..!! appeared first on Dinakaran.