×

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி செல்வதால் வாகனஓட்டிகள் கலக்கம்

சென்னை: பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி செல்வது வாகனஓட்டிகளை கலக்கமடைய செய்துள்ளது. புத்தாண்டின் தொடக்கத்தில் பெட்ரோல் டீசல் விலை பெரிய மாற்றத்தை சந்திக்காமல் இருந்து வந்தது. கடந்த 10-ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலையானது மீண்டும் உயர்வை நோக்கி பயணித்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்றும் பெட்ரோல் டீசல் விலையானது அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.72.79 காசுக்கு விற்பனை ஆகிறது. டீசல் 53 காசுகள் உயர்ந்து ரூ.67.78 காசுக்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வை நோக்கி பயணிப்பதால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : petrol,diesel,prices,peak,Motorists,disturbed
× RELATED கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல்...