சென்னை: மடிப்பாக்கம் ஏரிக்கரை அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ராவ் உன்னி (73), மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர், பிளேடால் கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
* ராயபுரம் சிஜி காலனியை சேர்ந்த சரண் (22), நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் அருண் (23) என்பவருடன் பைக்கில் திருச்சினாங்குப்பம் அருகே சென்றபோது, சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சரண் உயிரிழந்தார். அருண் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
* அம்பத்தூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முருகேசன் (40), தொழிலதிபர். நேற்று முன்தினம் முருகேசன், தனது மனைவி, குழந்தையுடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டு பூட்டை உடைத்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி