டெல்லி: கர்தார்பூர் முனைய விவகாரத்தில் 1947ஆம் ஆண்டு செய்த பிழை திருத்தப்பட்டுள்ளதாக மன்மோகன் சிங் முன்னிலையில் பிரதமர் மோடி கூறினார். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங்கின் பிறந்தநாளை போற்றும் வகையில் நாணயம் வெளியிடும் விழா பிரதமர் இல்லத்தில் நடந்தது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்றார். நாணயத்தை வெளியிட்ட பின்னர் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, சீக்கிய குருமார்கள் காட்டிய நீதியின் வழி தாங்கள் நடப்பதாகத் தெரிவித்தார்.
கர்தார்ப்பூர் முனையம் குறித்து பேசிய அவர், கர்தார்பூர் சில கிலோ மீட்டர் தூரத்திலேயே இருக்கிறது என்ற போதிலும், சுதந்திரம் அடைந்த போது புறக்கணிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி