சென்னை: தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் விலையில்லா வேட்டி, சேலை கிடைப்பதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விலையில்லா வேட்டி சேலைகளின் மீது பொங்கல் 2019 என்ற சீல் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட முறையில் விலையில்லா வேட்டி சேலை வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி