புனே: டாடா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - திவிஜ் ஷரண் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் இங்கிலாந்தின் லூக் பாம்ப்ரிட்ஜ் - ஜானி ஓமாரா ஜோடியுடன் நேற்று மோதிய போபண்ணா இணை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது. போபண்ணா - ஷரண் இணைந்து வென்ற முதல் ஏடிபி சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி