சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் துணை கேள்வி எழுப்பி பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். அங்கு ஆரம்ப சுகாதார நிலையமோ, மருத்துவமனையோ இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் மருத்துவ வசதி பெற நீண்ட தூரத்தில் உள்ள சென்னைக்கு வர வேண்டியுள்ளது.
செம்மஞ்சேரி சுனாமி நகரில் ஒரு மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு நிரந்தர மருத்துவர்கள் இல்லாத நிலையில் ஒப்பந்த அடிப்படையில்தான் மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். ஆகவே, அப்பகுதி மக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை பெரும்பாக்கம் பகுதியில் உருவாக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர்: சோழிங்கநல்லூர் பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் முழு வேகத்தில் மேற்கொள்ளப்படும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி