×

கேரளா சூழ்நிலை கவலை அளிக்கிறது எம்பி.க்கள் கருத்து

புதுடெல்லி: மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினரான வேணுகோபால் பேசுகையில், “ கேரள மாநிலத்தில் சபரிமலை விவகாரத்தில் நிலவும் பதற்றம் கவலையளிக்கிறது. இங்கு  அமைதி திரும்ப நடவடிக்கைகள் தேவை ” என்றார். இ.கம்யூனிஸ்ட் எம்பி கருணாகரன் கூறுகையில், “ ஒவ்வொரு குடிமகனும் அவர்களுக்கான புனித தலத்துக்கு செல்வதற்கான உரிமை உள்ளது.  சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என நீதிமன்ற தீர்ப்பை பாஜ எம்பிக்கள் பலர் வரவேற்றனர்” என்றார். தொடர்ந்து பேசிய பாஜ எம்பி மீனாட்சி லேக்கி, “ மக்கள் இந்து மதத்தை புரிந்துகொள்ளாமல் தவறான கதையை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.  ” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala ,MPs , Kerala provides an atmosphere of concern for the concept of MPs
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...