×

கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் 30 ஆண்டுக்கு பின்னோக்கி சென்று விட்டனர் :திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன் பேச்சு

சென்னை : கஜா புயல் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக கொண்டு வந்தது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன் பேசினார். அப்போது அதிமுக அரசு தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி, மத்திய அரசிடமிருந்து புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடுதல் நிவாரணத் தொகையை பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.மேலும் அவர் கூறியதாவது,கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் 30 ஆண்டுக்கு பின்னோக்கி சென்று விட்டனர், மத்திய அரசு அளித்துள்ள நிதி புயல் நிவாரணத்திற்கு போதாது; கஜா புயல் பாதித்த இடங்களை பிரதமர் மோடி இதுவரை பார்க்க வில்லை, இவ்வாறு அவர் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Durai Chandrasekaran ,DMK ,storm ,Ghazan , Guja storm, DMK, resolution, attention gravity, debate, durai chandrasekaran
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்