மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை ஆட்சியர் பதில் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சாதியினரையும் உள்ளடங்கிய குழு மூலம் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு குழுவுக்கு மாவட்ட ஆட்சியரை தலைவராக நியமிக்கலாம் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி அவனியாபுரத்தில் ஜன.15-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி