×

தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை உறுப்பினர்களை சேர்த்து மதிமுகவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்

* உயர்நிலைக்குழுவில் வைகோ அறிவுரை

சென்னை: தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை உறுப்பினர்களை சேர்த்து மதிமுகவின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்று உயர்நிலைக்குழுவில் வைகோ அறிவுரை வழங்கினார். மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நேற்று எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் 13 உயர்நிலை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மதிமுகவின் அடித்தள கட்டுமான பணியை வலுப்படுத்த என்ன மாதிரியான வேலைகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கட்சி உறுப்பினர்களை கூடுதலாக சேர்ப்பது குறித்தும், அதற்கான நடவடிக்கையில் கட்சி நிர்வாகிகளை களம் இறக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மதிமுக உறுப்பினர் இல்லாத கிராமங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கவும் இக்கூட்டத்தில் வைகோ கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

வரும் மே மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைகோ உத்தரவிட்டுள்ளார். அனைத்து இடங்களிலும் கிளை கழகங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் பணிக்குழு நியமனத்தை வேகப்படுத்து தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சியினரிடம் நிதி வசூலிக்கும் பணியை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து உயர்நிலை குழு உறுப்பினர்கள் விவாதிக்கப்பட்டது. திருவாரூர் சட்டமன்ற தேர்தலில் வைகோ பிரசாரம் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், ஊர், ஊராக மதிமுகவினர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,hamlets , Tamil Nadu, MDMK, vaiko,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...