சென்னை : சென்னை ராயப்பேட்டை பெருமாள் முதலி தெருவில் பொன்ராஜ் என்பவர் வாஷிங்மெஷின் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். விடுமுறை நாளான நேற்று கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சில நிமிடங்களில் கடையில் தீ பற்றி எரிய ெதாடங்கியது. இதை பார்த்த அப்பகுதிவாசிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்நிலையில் தீவிபத்து குறித்து அண்ணாசாலை போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி