×

எவ்வித அழுத்தத்திற்கும் தமிழக அரசு அடிபணியக் கூடாது மேகதாது அணை கட்ட தந்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: எக்காரணம் கொண்டும், எவ்வித  அழுத்தத்திற்கும் அடிபணிந்து மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு  அனுமதித்து விடக்கூடாது என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, கலைஞர் அரங்கில், திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டம் துவங்குதற்கு முன், கஜா புயலால் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கஜா புயல் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவா ரூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட வேறு சில மாவட்டங் களும் இதுவரை காணாத மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, 65 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் தங்களின் வேளாண்மையைப் பறிகொடுத்து, மீனவர்கள் தங்கள் படகுகளை இழந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி பரிதவித்து நிற்கிறார்கள்.

நவம்பர் 15ம் தேதி நள்ளிரவில் வீசிய பலத்த புயல் பாதிப்புகளினால் இழந்த வாழ்க்கையை மீட்டு எடுக்க, நிவாரணங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் தேவையான கஜா புயல் பேரிடர் நிதியை இன்று வரை மத்திய பாஜ அரசு வழங்காமல் தாமதிக்கிறது. பேரிடர் நிதியை உரிய காலத்தில் கேட்டுப் பெற முடியாத அதிமுக அரசு, பாராளுமன் றத்தில் பாஜவிற்கு ஆதரவாக அமளியில் ஈடுபடுகிறதே தவிர, கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை முற்றிலும் கிடப்பில் போட்டு மக்களை தினந்தோறும் போராட்டக் களத்தில் தள்ளியிருக்கிறது.தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசுக்கும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை முடக்கி வைத்துள்ள அதிமுக அரசு க்கும் இந்த கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.இனியும் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக கஜா பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக் கடன்களை தள்ளுபடி செய்யவும் அவர்களுக்கான நிவாரண உதவிகளை விரைவில் வழங்கவும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பை மீறி, காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, மத்திய பாஜக அரசு கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி கொடுத்திருப்பதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவி த்துக் கொள்கிறது.

 கர்நாடக அரசு இது போன்று அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நேரத்தில் மத்திய அரசு அக்கடிதத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும்.அவ்வாறு செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி கொடுத்து விட்டு இன்று தமிழகத்தின் அனுமதியின்றி அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது. மத்திய அரசு தற்போது அளித்துள்ள அனுமதி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு எதிரானது என்பது தெரிந்திருந்தும், ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்குத்தான் அனுமதி கொடுத்தோம் என்று மத்திய பாஜ அரசு மிகச் சாதாரணமாகக் கூறி வருவது கவலையளிக்கிறது.கர்நாடக மாநிலத்தில் அடைய விரும்பும் தேர்தல் லாபத்திற்காக மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய அரசின் செயல் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் போக்கு என்பதை விட, தமிழக உரிமைகளைப் பறிக்கும் அடாவடிச் செயல் என்று இந்த கூட்டம் கருதுகிறது. ஆகவே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டம் கேட்டுக் கொள்கிறது.எக்காரணம் கொண்டும், எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணிந்து மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதித்து விடக்கூடாது என்றும், காவிரியில் தமிழக உரிமையை பாதுகாத்திடும் நோக்கில் இப்போது கொடுத்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று உரிய அரசியல் அழுத்தத்தை மத்திய பாஜ அரசுக்கு அளிக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,dam ,Meghatadu ,Tamil Nadu , central government,approval , construction ,Meghatadu dam
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...