×

பேஸ்புக் நட்பு, காதலாக மாறியதால் விபரீதம் மாணவி கழுத்தை அறுத்து கொலை: திருமணத்துக்கு மறுத்த காதலன் வெறிச்செயல்

நாங்குநேரி: நெல்லை தாழையூத்து அருகே உள்ள தென்கலத்தை சேர்ந்தவர் மதார் மைதீன் (45). இவர், குடும்பத்துடன் பேட்டை ரஹமத் நகரில்  வசித்து வருகிறார். இவரது மனைவி செய்யது பாத்திமா (42). இவர்களது மகள்கள் ஆஷிகா பர்வீன் (18), ஷபானா (13), மகன் ஷேக் முகம்மது (9). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள ஆஷிகா பர்வீன், டவுனில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் பயின்று வந்தார். நேற்று முன்தினம் காலையில், படிப்பதற்காக வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில், சின்னமூலைக்கரையில், செயல்படாத சுண்ணாம்பு தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அங்கு கிடந்த செல்போன் மற்றும் தடயங்கள் மூலம் கொலை செய்யப்பட்ட பெண், ஆஷிகா பர்வீன் என தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, சின்னமூலைக்கரைப்பட்டி காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த முருகன் மகன் சுந்தர் (20) என்பவரை கைது செய்தனர். ஜே.சி.பி. கிளீனரான அவர், திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண்ணை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

எனக்கும், ஆஷிகாவுக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. இது நட்பாகி காதலானது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டோம். என்ைன திருமணம் செய்து கொள்ளும்படி ஆஷிகாவை வற்புறுத்தினேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதுமட்டுமின்றி அவருக்கு பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதையறிந்த நான், மீண்டும் திருமணத்துக்கு வற்புறுத்தினேன். நேற்று முன்தினம் பைக்கில் ஆஷிகாவை மூலைக்கரைப்பட்டி அழைத்து வந்தேன். சம்பவ இடத்தில் அவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த நான், எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஆஷிகாவின் கழுத்தை அறுத்து கொன்றேன்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

‘‘மகளை பின்தொடர்ந்தும் காப்பாற்ற முடியவில்லை’’ தாய் கதறல்
கொலையான ஆஷிகா பர்வீனின் தாய் பாத்திமா கூறியதாவது: நேற்று முன்தினம் வீட்டு வாசலில் நீண்டநேரமாக பைக்கில் ஒரு வாலிபர் நின்றிருந்தார். இதுபற்றி கேட்டபோது, தனது நண்பர் என்றும், தன்னிடம் உள்ள அவரது போட்டோவை வாங்க வந்துள்ளதாகவும் ஆஷிகா கூறினார். இதனிடையே அவர் பைக்கில் புறப்படவே, ஆஷிகாவும் கணினி மையத்துக்கு கிளம்பிச் சென்றார். ஆனாலும் சந்தேகம் எழவே மகளை பின்தொடர்ந்து சென்றேன். கணினி மையத்தில் மகளை காணாததால் செல்போனில் தொடர்பு கொண்டேன். அப்போது ஜங்ஷனில் இருப்பதாகவும், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டு சென்டருக்கு சென்று விடுவேன் என கூறினார். ஜங்ஷனுக்கு சென்று தேடினேன். அங்கும் இல்லாததால் அறிவியல் மையத்தில் தேடி பார்த்தேன்.

 அங்குள்ள காவலாளியிடம் அடையாளம் கூறி கேட்டபோது, ஒரு பைக்கில் பெண்ணும், வாலிபரும் சென்றதாக தெரிவித்தார். உடனே, அப்பகுதி முழுவதும் தேடியும் மகள் கிடைக்காததால் ஒருவித பயத்துடனே வீட்டுக்கு சென்று உறவினர்களிடம் தெரிவித்ேதன். மதியம் 2.30 மணியளவில் செல்போனில் உறவினர்கள் தொடர்பு கொண்ட போது, வீட்டுக்கு வந்துவிடுவேன் என கூறினார். அதன்பின், மகள் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது.  இவ்வாறு கதறிஅழுதபடி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Facebook Friendship, Love, Sleeping, Marriage, Lover
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...