தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே 22ல் நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. நீதிபதி அருணா ஜெகதீசன், தூத்துக்குடியில் 5 கட்டங்களாக விசாரணை நடத்தினார். கடந்த 17ம் தேதி மீண்டும் தூத்துக்குடி வந்து 6வது கட்ட விசாரணையை அவர் துவக்கினார். இதற்காக 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களில் 12 பேர் விசாரணைக்கு ஆஜராயினர். நேற்று 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 6 பேர் ஆஜராயினர். இன்று 6வது கட்ட விசாரணையை முடித்துக்கொண்டு சென்னை அலுவலகம் திரும்புகிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி