×

போலிச்சான்று தந்து பணியில் சேர்ந்த நூலகர் பணி நீக்கம்

வேலூர்: வேலூர் மாவட்டம் மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(47) என்பவர் வாலாஜா அடுத்த அனந்தலை ஊர்புற நூலகத்தில் நூலகராக பணியாற்றி வந்தார். இவரது சான்றிதழ்கள் உண்மை தன்மையை கண்டறிய அரசு தேர்வுகள் இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வின்போது, நூலகர் லோகநாதன் பணியில் சேரும்போது போலி பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன் எஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இந்நிலையில், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த நூலகர் லோகநாதன் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : librarian , librarian,Dismissed,producing,False evidence
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி