×

கார் மோதி பெண் துறவிகள் 2 பேர் பலி

கிருஷ்ணகிரி: வட மாநிலங்களை சேர்ந்த ஜைன மத பெண் துறவிகள் 9 பேர், மற்றும் ஒரு ஆண் துறவி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தனர். இரவில் சுபேதார்மேடு அருகில் உள்ள பத்மாவதி கோயிலில்  தங்கினர்.  நேற்று காலை திருப்பத்தூர் செல்ல கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் நடந்து சென்றனர். அப்போது  69 வயதான ஜிந்தர்மசூரியை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளியபடி பூஜா(24) சென்று கொண்டிருந்தார். பர்கூர்  கந்திகுப்பம் பகுதியில் சென்றபோது, கார் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ெபண் துறவிகள் இருவரது உடல்களையும் விமானத்தில் சொந்த ஊர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Car collision ,monks , Car, collide, Female monks, 2 killed
× RELATED சிறுமிகளை கடத்த முயன்றதாக...