×

பால்கனி இடிந்து விழுந்து 2 மூதாட்டிகள் பலி; 2 பேர் காயம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் புத்திராங்கன்னி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (70). இவருக்கு சொந்தமான வீட்டில் துளசியம்மாள் (65) என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். நேற்று மாலை 5 மணியளவில் மாரியம்மாளும், துளசியம்மாளும் வீட்டு வாசலில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பால்கனி திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில், மூதாட்டிகள் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், அந்த வழியாக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த குமாரி (40) மற்றும் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து திருவான்மியூர் போலீசார் சம்பவ இடம் வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலஙகளை கைப்பற்றி ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balcony ,victims , Balcony collapses ,2 victims killed, 2 people ,injured
× RELATED சென்னையில் சாலையோர நடைபாதைகளில்...