×

தாமிரபரணியில் குளித்த சென்னை வியாபாரி நீரில் மூழ்கினார்

நெல்லை:  சென்னை ஆலந்தூரைச் சேர்ந்தவர் சம்சுதீன் (45). தூத்துக்குடி மாவட்டம், கலியாவூரை பூர்விகமாகக் கொண்ட இவர், சென்னையில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். குடும்பத்துடன் ஆலந்தூரியில் வசித்து வந்தார். நண்பர்கள் 6 பேருடன்  சுற்றுலாவாக நெல்லை சென்றார். நேற்று காலை நெல்லைக்கு ரயிலில் வந்த அவர்கள் குற்றாலத்திற்கு காரில் சென்று மெயினருவியில் குளித்தனர். பின்னர் நெல்லை தாழையூத்து அருகேயுள்ள அருகன்குளம் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு  மாலை 6 மணிக்கு வந்த இவர்கள், ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது அங்குள்ள சுழலில் சிக்கித் தவித்த சம்சுதீன் நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து வந்த தாழையூத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : businessman ,Chennai ,Tamaraparani , Thamiraparani, Chennai businessman, drowned in water
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது