தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த முருகமலை வனப்பகுதி மலையடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மலையடிவாரப் பகுதியில் காவலுக்காக வளர்க்கப்படும் நாய்களை, சிறுத்தை வேட்டையாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி