×

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி, தலைவர்கள் வாழ்த்து

சென்னை:தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்ட வாழ்த்து செய்தி: தலைசிறந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவித்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். தற்கால தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்ச், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.

இந்நிலையில் மத்திய அரசு இவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவித்து இருப்பது அவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தமைக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மீண்டும் ஒருமுறை பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மேன்மேலும் இதுபோன்ற பல விருதுகளை பெற அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இதேபோல், துணை முதல்வர் ஓபிஎஸ், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : S. Ramakrishnan ,Chief Minister ,leaders ,Edappadi , Writer, S. Ramakrishnan,Edappadi congratulates ,leaders
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...