சென்னை : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக இன்று மாலை 4 மணிக்கு தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இன்று நடத்தும் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை
* அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிப்பு
* அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிப்பு
* அனுமதியை திரும்பப் பெறுமாறு மத்திய நீர்வள அமைச்சகம் உத்தரவிட வேண்டும்
* காவிரி படுகையில் மேகதாது உள்ளிட்ட எந்த இடத்திலும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளக் கூடாது
* மேகதாது விவகாரம் தொடர்பாக, அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி கொண்டு வர உள்ளார். இதனை அவை முன்னவரான ஓபிஎஸ் முன்மொழிய உள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி