×

சர்ஜிகல் ஸ்டிரைக் மூலம் எல்லை தாண்டி அடிக்க உருவாகிறது புதிய கமாண்டோ படை..!

டெல்லி: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்தும் நோக்கிலும், அவர்களது எல்லை தாண்டிய முகாம்களை அதிரடியாக அழித்தொழிக்கவும் சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்த புதிய கமாண்டோ படை உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மத்திய அரசு வட்டாரம், முப்படைகளில் இருந்தும் மிகச்சிறந்த வீரர்களை தேர்வு செய்து புதிய கமாண்டோ படை ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளன. ராணுவத்தில் துணை ராணுவ படை, விமானப்படையில் கருடா படை, கடற்படையில் மார்கோஸ் படை போன்ற உள்ளன.

இந்த மூன்று பிரிவுகளில் இருந்தும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து, துல்லிய தாக்குதல் படை ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2 பிரிவுகள் பிரிக்கப்பட்டு ஒன்று திட்டமிடும் பிரிவாகவும், மற்றொரு பிரிவு தாக்குதலை மேற்கொள்ளும்படியும் உருவாக்கப்படும். திட்டமிடும் பிரிவில், 96 வீரர்களும், தாக்குதல் பிரிவில், 124 வீரர்களும் இடம் பெறுவார்கள். இவ்வாறு உருவாக்கப்பட உள்ள புதிய கமாண்டோ படை பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், எல்லை தாண்டி சென்று திடீர் அதிரடி தாக்குதல்களை நிகழ்த்தவும் பயன்படுத்தப்படும்.

அதிபயங்கர தீவிரவாதியாக திகழ்ந்த ஒசாமா பின்லேடனை, அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த, சீல் படை வீரர்கள் தான் திடீர் தாக்குதல் நடத்தி கொன்றனர். அது போன்று இந்தியாவில் அமைக்கப்படும் புதிய கமாண்டோ படை செயல்படும். இந்த புதிய படை ராணுவ தலைமை தளபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என தெிவிக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commando Force ,surgeon strike , Radicals, new commando force, surgeon strike
× RELATED கார்கிலில் முதல் முறையாக இரவில் தரையிறங்கிய ஹெர்குலஸ் விமானம்