×

மொபட் மீது லாரி மோதியதில் பெண் எஸ்ஐ உடல் நசுங்கி பலி

* போதை டிரைவருக்கு தர்மஅடி * 100 அடி தூரம் இழுத்து சென்ற கோரம்

சென்னை: மொபட் மீது டாரஸ் லாரி மோதியதில், அதில் சிக்கி 100 அடி தூரம் இழுத்து செல்லப்பட்ட பெண் எஸ்ஐ, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போதையில் லாரியை ஓட்டிய  டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மேற்கு தாம்பரம் கன்னடபாளையத்தை சேர்ந்தவர் மாங்குயில் (32). சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்ஐயாக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் ஜெயக்குமார். தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக  உள்ளார்.நேற்று மதியம் மாங்குயில் தனது மொபட்டில், தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார். வண்டலூர்-வாலாஜாபாத் சாலை, செரப்பணஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி,  மொபட் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த மாங்குயில் மற்றும் அவரது மொபட் லாரி அடியில் சிக்கி சுமார் 100 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மாங்குயில் பரிதாபமாக இறந்தார்.இதை பார்த்ததும் லாரி டிரைவர் கீழே குதித்து தப்பியோட முயன்றார். உடனே அப்பகுதி மக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்தனர்.தகவலறிந்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், பொதுமக்களிடம் சிக்கிய லாரி டிரைவரை மீட்டு, காவல் நிலையம்  கொண்டு விசாரித்தனர்.அதில், லாரி டிரைவர் தாம்பரம் கடப்பேரி அடுத்த பர்மா காலனியை சேர்ந்த சீனிவாசன் (23) என தெரிந்தது. மேலும் விசாரணையில், அவர் மது அருந்திவிட்டு போதையில் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு எஸ்ஐ மணிக்குயில்  இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Girl SI , Girl SI,killed , lorry ,Mobit
× RELATED கைரேகை நிபுணர் தேர்வு: தேசிய அளவில்...