×

தமிழகத்திற்கு ஆளுநரும், நாட்டிற்கு மோடியும் ஒரு சாபக்கேடு: வைகோ காட்டம்

கோவில்பட்டி: தமிழகத்திற்கு ஆளுநரும், நாட்டிற்கு மோடியும் ஒரு சாபக்கேடு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நாட்டுக்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஒரு சாபக்கேடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் அத்துமீறி புரோக்கராக செயல்படுகிறார்.

3 மாணவிகளை எரித்து கொன்றவர்களை விடுவிக்கும் ஆளுநர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 அப்பாவி தமிழர்களை விடுவிக்காதது ஏன்? என அவர் வினவியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி சென்னையில் நடைபெறவுள்ள பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினால், ஜல்லிக்கட்டு போராட்டம் போல மிகப்பெரிய போராட்டமாக அது மாறும் என வைகோ எச்சரித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : governor ,country ,Tamil Nadu ,Modi ,Vaikom Khatam , Vaiko, Governor Panwarilal Purohit, Prime Minister Modi,
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...