×

திருச்சி அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணியினர் பங்கேற்க வேண்டும்: திமுக அழைப்பு

சென்னை: 4ம் தேதி திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக விவசாய அணியினர் திரளாக பங்கேற்குமாறு கே.பி.ராமலிங்கம் கேட்டுக் கொண்டுள் ளார்.  மேதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி  அளித்தது. இதற்கு திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்தது. கூட்டத்தில் எடுத்த முடிவின்படி வருகிற 4ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சியில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களை ேசர்ந்த விவசாயிகள், திமுக விவசாய அணியினர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்குமாறு விவசாய அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TRAI ,DMK ,party demonstrations , Trichy, All party, demonstration, farm team, DMK
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்