சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கஜா புயலால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பில் இருந்து மக்களை மீட்கவும், நம்பிக்கையூட்டவும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவ நம்பிக்கையிலிருந்து மீள்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் பாதிப்பின் அளவையும் பயனாளிகளின் எண்ணிக்கையினையும் வெகுவாக குறைக்க முயல்வது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயலாகும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவித்து, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், பாகுபாடு இன்றி நிவாரணங்களை வழங்கிட அரசு முன் வரவேண்டும் எனவே பாகுபாடு இன்றி, அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி