×

மாறு வேடத்தில் இருந்த 3 போடோ தீவிரவாதிகள் கேரளாவில் சிக்கினர்

திருவனந்தபுரம்: கொச்சியில் மாறுவேடத்தில் பிளைவுட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ‘போடோ’ இயக்க தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி அருகே மண்ணூர் என்ற இடத்தில் ஒரு பிளைவுட் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அசாம், மேற்குவங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தடை செய்யப்பட்ட போடோலேன்ட் தேசிய ஜனநாயக முன்னணி என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் இந்த தொழிற்சாலையில் மாறுவேடத்தில் பணிபுரிந்து வருவதாக கேரள உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று  பெரும்பாவூர் போலீசார் அந்த தொழிற்சாலையை சுற்றி வளைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் 3 பேர் அங்கு வேறு பெயர்களில் பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் போடோ தீவிரவாதிகள் என தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அசாம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் வந்ததும் 3 பேரும் அசாம் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று பெரும்பாவூர் போலீசார் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala ,militants ,Bodo , Poto militants, Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...