சென்னை: ஆற்காடு இளவரசருக்கு வழங்கப்படும் சலுகையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். ஆற்காடு இளவரசர் வசிக்கும் அமீர் மகாலுக்கு பொதுப்பணித்துறை ரூ.2.74 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆற்காடு நவாப்புக்கு இளவரசர் பட்டமும் சலுகைகளும் வழங்கப்பட்டன எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஜனநாயக நாட்டில் ஆர்க்காடு இளவரசர் என்ற பட்டமும், சலுகைகளும் வழங்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி