×

தொல்லியல் அறிஞர் மறைவு

சென்னை: திருச்சியை சேர்ந்த தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். மத்திய அரசின் தொல்லியல் துறையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர், கடந்த 1987ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை தமிழ் நாளிதழ் ஒன்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.  தொல்லியில் துறையில் பல ஆய்வுகள் செய்து தமிழர் தொன்மை குறித்து வெளியிட்டவர். வித்யாசாகர் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வந்தார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக சில காலம் ஓய்வில் இருந்தார். உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று காலை காலமானார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Archaeologist , Archaeologist
× RELATED திருச்சுழி அருகே குதிரை படத்துடன் 800...